Connect with us

latest news

முத்துவிடம் விஷயத்தை சொன்ன மீனா.. கடுப்பான அண்ணாமலை.. திருந்துங்க விஜயா..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி அவங்க ரூம் அவங்க எடுத்துக்கிட்டாங்க. இதுல நம்ம கோபப்பட என்ன இருக்கு எனக் கூறி விடுகிறார். அதையடுத்து, மீனாவை மாடியில் வந்து மேலும் திட்டுகிறார் விஜயா. அவன் ரூமை திறந்துவிடணும். இல்லை இந்த வீட்டுல நீ இருக்க முடியாது என்கிறார்.

அப்போ அதையாது பண்ணுங்க என மீனா கண்ணீருடன் கூறிவிடுகிறார். முத்துவிற்கு போன் அடித்து எடுக்காததால் செல்வம் நம்பருக்கு கால் செய்ய முத்துவை பேச சொல்கிறார். அவரும் எடுத்து பேச நான் இந்த வீட்டுல கூட இருக்கலை. ஆனா ரூமை திறந்து விடுங்க. உங்களால நான் அவமானப்பட்டு இருக்கேன் என்கிறார்.

இதையும் வாசிங்க:தனது அப்பா கெட்டப்பில் ரஜினி நடித்த படம்!.. அப்பா மேல இவ்வளவு பாசமா?!..

முத்துவும் கிளம்பி வருகிறேன் என வீட்டுக்கு வருகிறார். ரவி  உன் தம்பி தானே விட்டுக்கொடுத்தா என்ன என்கிறார் விஜயா. அது என் ரூம். நான் ஏன் விட்டுக்கொடுக்கணும். இது என் வீடு என விஜயா கூற இந்த வீடு அப்பா பேருல தான் இருக்கு. மாடி போர்ஷன் அப்பா தான் லோன் போட்டு கட்டுனாரு என்கிறார்.

ரோகினியும், மனோஜும் விட்டு கொடுக்க சொல்ல ஏன் உங்க ரூமை கொடுக்கிறது என்கிறார். இதையடுத்து மீனா நீ ஏன் அழுத மாதிரி இருக்க எனக் கேட்க நீங்க பாட்டுக்கும் ரூமை சாத்திட்டு போயிட்டீங்க. இங்க நான் தானே அசிங்கப்பட்டேன். 

யார் என்ன சொன்னா என மனோஜை கேட்க அவர் நான் பேசவே இல்லை என்கிறார். ரோகினியும் தனக்கு தெரியாது என்கிறார். உடனே முத்து அப்போ எங்க அம்மா தான் பேசிருப்பாங்க. என்ன சொன்னாங்க எனக் கேட்கிறார். விஜயா சொன்ன அந்த வார்த்தை மீனா சொல்ல முத்து அதிர்ச்சியாகிறார்.

இதையும் வாசிங்க: பிடிவாதம் பண்ணிய எம்ஜிஆர் மனைவி… ஆனால் கடைசில கிடைச்ச வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாங்களே!…

இதை சரியாக கேட்டுவிட்டு அண்ணாமலையும் வந்து விடுகிறார். இப்படி கேவலமா உங்களால எப்படி பேச முடியுது? அப்பா கொண்டு வந்த பூக்கட்டுற பொண்ணுனு தானே இவளோ பேசுறீங்க. இதுவே உங்க பணக்கார மருமகள்கள பேசுனா என்ன ஆகும்? இங்கிலீஷ்ல திட்டிட்டு போயிடுவாங்க என்கிறார்.

அண்ணாமலையை பார்த்து மீனாக்கு இந்த வீட்டுல அவ்வளோ தான் மரியாதை என்கிறார். உடனே இதானே வேணும் என ரூமை  திறந்துவிட்டு சாவியை விசிறடித்து விட்டு சென்று விடுகிறார். அண்ணாமலை விஜயாவை தனியாக அழைத்து உனக்கு அறிவு இருக்கா? தரம் பிரிச்சு வச்சிருக்க என்கிறார். முத்து ரூம் பூட்டாம இருந்தா நான் எதுக்கு இப்படி எல்லாம் பேச போறேன். அவனை கேட்கவே மாட்டிங்குறீங்க என்கிறார் விஜயா.

திரும்பவும் ஆரம்பிக்காத. இதுக்கு நான் ஒரு முடிவு கட்றேன் என்று விஜயாவை வெளியே அழைத்து வருகிறார்.  நாளை காட்சிகளில் தன் ரூமை ரவிக்கு அண்ணாமலை கொடுக்க விஜயா என்னது என்கிறார். நீ தானே ரவி தங்கணும் கேட்ட எனக் கேட்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் வாசிங்க: பாக்கியா ரூட் க்ளியர்.. அப்போ பிரச்னை ஆரம்பிக்கணும்ல.. மீண்டும் வெடிக்கும் ஜெனி பஞ்சாயத்து..!

google news
Continue Reading

More in latest news

To Top