Connect with us

latest news

ரூமை விட்டு கொடுத்த அண்ணாமலை… கடைசியில் அவரையே குறை சொன்ன ஸ்ருதி..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயாவை வெளியே அழைத்து வந்து அண்ணாமலை எல்லாரையுமே ஹாலுக்கு கூப்பிடுகிறார். ரூம் தானே பிரச்னை. முத்து நீ உன் ரூம்லையே இருந்துக்கோ. எங்க ரூமை ரவிக்கு கொடுத்துடுறேன் என்கிறார்.

இதில் விஜயாவே ஷாக் ஆகிவிடுகிறார். என்னங்க எனக் கேட்க நீ தானே ரவி இருக்கணும் என ஆசைப்பட்ட என்கிறார். அதனுடன் விஜயாவால் எதுவுமே பேச முடியாமல் போய்விடுகிறது. முத்துவும், மீனாவும் வேண்டாம். நாங்களே ஹாலில் இருந்துக்குறோம் என்கிறார்.

இதையும் படிங்க: இது வேறமாறி வெற்றி!.. ஓடிடி தளத்தில் துவம்சம் பண்ண துணிவு.. இத்தனை கோடி பேர் பார்த்துருக்காங்களா!

உடனே விஜயா அதான் அவங்க ரூம் தரேன் சொல்லிட்டாங்கள என்கிறார். இல்லை இதான் முடிவு. நான் ஹாலில் படுத்துக்குறேன். உங்களுக்கு இப்போ தான் ஆபிரேஷன் நடந்துருக்கு என கவலையுடன் முத்து கூறுகிறார். நான் அப்பா தானே சொல் பேச்சு கேளு என அடக்கி விடுகிறார்.

இதனையடுத்து முத்து தன்னுடைய ரூமில் இருந்த பெட்டை எடுத்து வந்து ஹாலில் போட்டு விடுகிறார். இதில் விஜயாவுக்கு கவலையே வந்து விடுகிறது. ரவி-ஸ்ருதி அப்போ வீட்டுக்கு வர ஏன் ஹாலில் வந்து இருக்கு எனக் கேட்க அண்ணாமலை தான் எடுத்த முடிவை கூறுகிறார்.

இதையும் படிங்க: கேண்ட்டீனை பிரச்னை ஓவர்..! அடுத்து சைக்கோ எண்ட்ரி தான? மாலினி, கணேஷ் தொல்லை ஆரம்பம்..!

ரவி ஏன்பா நாங்க இருந்த வீட்டுக்கே போய்டுறோம் என்கிறார். உடனே விஜயா இதுக்கா உன்னை கஷ்டப்பட்டு கூப்பிட்டு வந்தேன். என் பேச்சை கேளு. அண்ணாமலைக்கு தொலைநோக்கு பார்வை இல்லாம போச்சு. அப்போவே மூணு ரூம் கட்டி இருக்கணும் என்கிறார். இதனை தொடர்ந்து, அண்ணாமலை தப்பு பண்ணிட்டேன். என் பசங்க விட்டு கொடுப்பாங்க நினைச்சேன்.

இப்போ அந்த தப்ப திருத்திக்கிறேன் என்றார். ரவி, ஸ்ருதி ரூமில் இருக்கின்றனர். உனக்கு இங்க எந்த பிரச்னை இல்லை தானே. நீ தானே இந்த வீட்டுக்கு வரணும் ஆசைப்பட்ட எனக் கேட்கிறார் ஸ்ருதி. கூட்டு குடும்பம்னா இப்படி பிரச்னை எல்லாம் இருக்கும். ஆனா எனக்கு உன்னோட இருக்கது சந்தோஷமா இருப்பதாக கூறுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top