Connect with us

Cinema News

சிறகடிக்க ஆசை: ரோகிணி அம்மாவை லாக் செய்த மீனா… ஒரே பதிலால் மாட்டிவிட்ட க்ரிஷ்…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகிணி அம்மாவை செக்கப் அழைத்து சென்று வித்யா வீட்டுக்கு வருகிறார். குணமாகிடுவாங்க. ரொம்ப வேலை பார்க்காம ரெஸ்ட் எடுத்த சரியாகிடுவாங்கனு சொன்னதா சொல்கிறார். 

இரண்டு நாள் கழித்து செல்லலாம். வெளியில் சுற்றி பார்த்துவிட்டு அனுப்பலாம் என வித்யா கூறியதற்கும் முடியவே முடியாது என முரண்டுபிடித்தப்படி இருக்கிறார். ஊருக்கு போ நான் கூப்பிடாம இந்த பக்கம் வராது என கறாராக சொல்லி அனுப்புகிறார். காலும் செய்யாத மெசேஜ் செய்தால் போதும் எனக் கூறுகிறார்.

உன்னால முடிஞ்சா க்ரிஷை பாரு இல்ல ஹாஸ்டல்ல சேர்த்து விட்றலாம் எனக் கூற ரோகிணி அம்மாவுக்கு கோபம் வந்து விடுகிறது. நான் உயிரோட இருக்கும் வரை அவனை நான் பார்த்துப்பேன் எனக் கத்துகிறார். அவன்கிட்டயாது உண்மையை சொல்லு எனக் கூறியும் அப்போ பாத்துக்கலாம் என ரோகிணி கூறி செல்கிறார்.

இதையும் படிங்க: கன்னத்தில் அறைந்த அசின்!.. அதிர்ந்துபோய் அப்படியே நின்ற விஜய்!.. அட அந்த படத்திலா?!..

ட்ராவல்ஸில் காரை புக் செய்து இவங்களை ஊருக்கு அனுப்பி விடு என வித்யாவிடம் சொல்லிவிட்டு பார்லர் சென்றுவிடுகிறார். வித்யா அவருக்கு தெரிந்த ட்ரைவருக்கு கால் செய்ய அவர் வேலையில் இருப்பதாக கூறுகிறார். அவர் தனக்கு தெரிந்த ட்ரைவரை அனுப்புவதாக கூறுகிறார்.

கடைசியில் ரோகிணி அம்மாவை அழைத்துக் கொண்டு பஸ் ஸ்டாண்ட் செல்ல முத்துவே வருகிறார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தாலும் காட்டிக்கொள்ளாமல் காரில் வருகிறார். சொல்லாமலே போயிட்டீங்களே எனக் கேட்க இருந்தேன். ஆனா எங்க சொந்தக்கார பொண்ணுக்கு வேலை வந்துவிட்டதால் போய் விட்டதாக சமாளிக்கிறார்.

மீனா தான் ரொம்ப கவலைப்பட்டா ரொம்ப புலம்பிகிட்டே இருந்தா என முத்து சொல்கிறார். மீனாவை பார்த்து விட்டு பஸ் ஸ்டாண்ட் போலாமே என முத்து கேட்கிறார். அதெல்லாம் வேணாம் என மறுக்க 5 நிமிசம் தான் போயிடலாம். இப்போவே பாத்துடுங்களே என முத்து வலுகட்டாயப்படுத்தி சொல்கிறார்.

வீட்டுக்கு வரும் முத்து மீனாவை அழைத்து சென்று காட்டுகிறார். இதனால் மீனா ரொம்பவே சந்தோஷப்படுகிறார். அந்த நேரத்தில் ஆட்டோவில் வந்து ரோகிணியும், வித்யாவும் வர மீனாவுடன் ரோகிணி அம்மா இருப்பதை பார்த்து ஷாக் அடைகின்றனர். ஒளிந்து நின்று அவர்கள் பேசுவதை கவனிக்கின்றனர்.

உங்களுக்கு யாரும் இல்லனு தான சொன்னீங்க? ஆனா ஹாஸ்பிட்டல்ல யாரோ பொண்ணு கூப்பிட்டு போனதா சொன்னாங்களே. உங்க பொண்ணு வந்துட்டாங்களா என மீனா கேட்கிறார். இல்ல அவ சிங்கப்பூர் போயிட்டா எனக் கூற மீனா அன்னைக்கு துபாய் தானே சொன்னீங்க எனக் கேட்கிறார்.

வயசாகிட்டுல்ல ஊர் பெயரு மறந்துவிடுவதாக கூறுகிறார். நீ கூட என்கிட்ட சொல்லாம போயிட்டல என க்ரிஷிடம் கேட்க எங்க அத்தை தான் உங்ககிட்ட பேச கூடாதுன்னு சொல்ல எங்க சொந்தக்கார பெண் தான் என ரோகிணி அம்மா சமாளிக்கிறார். பேசிக்கிட்டே இருக்கேன் வீட்டுக்கு வாங்க என மீனா கூப்பிட அந்த நேரத்தில் ரோகிணி மறைந்து இருந்து போகாதே என சைகை செய்கிறார்.

இதையும் படிங்க: லியோ ஸ்பெஷல் ஷோவுக்கும் செக்!.. விஜய் ரசிகர்களை நினைச்சாத்தான் பாவமா இருக்கு!.

க்ரிஷையும் மறைந்து இருந்து மிரட்டுகிறார் ரோகிணி. இதனால் க்ரிஷ் அமைதியாக இருக்கிறார். நான் மயக்கம் போட்டதுல பயந்துட்டதா சொல்லி சமாளிக்கிறார். பிறகு மீனா தன் நம்பரை தரேன் எழுதிக்கோங்க என சொல்வதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top