Connect with us
rajini

Cinema News

என் மகனை ரஜினியிடம் காட்டி ‘யார் போல் இருக்கிறான்?’ என கேட்பேன்!.. பலவருடங்கள் கழித்து பேசும் நடிகை..

Actor Rajini: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகராக தற்போது வரை இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை கடந்தும் இன்னும் அவருடைய குறும்புத்தனமான நடிப்பு, ஸ்டைல் என எதுவுமே மாறாமல் அப்படியே தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் எப்பேற்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவரும் அறிந்த ஒன்று. இந்த வயதிலேயும் இன்றயை தலைமுறை நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் ஒரு போட்டியாளராகவே இருந்து வருகிறார் ரஜினி.

இதையும் படிங்க: எங்க செல்லம் பாதி டிரெஸ்ஸ காணோம்!.. தூக்கலா காட்டி தூங்கவிடாம பண்னும் ரேஷ்மா..

இந்த நிலையில் ரஜினியை பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலை சமீபத்தில் ஒரு நடிகை பகிர்ந்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. இயக்குனர் மகேந்திரனின் மனைவியும் நடிகையுமான பிரேமி. 16 வயதினிலே, ஜானி, உதிரிபூக்கள் போன்ற ஆரம்பகால படங்களில் நடித்தவர்தான் பிரேமி.

premi

அதிலும் ஜானி படத்தில் ஸ்ரீதேவி பாடும் ‘காற்றில் இந்த தீபம்’ பாடலில் ஸ்ரீதேவிக்கு பின்னாடி நின்று  கொண்டிருக்கும் அந்த நடிகைதான் பிரேமி. இயக்குனர் மகேந்திரனை திருமணம் செய்து 7 வருடங்கள் மட்டும் அவருடன் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க: அந்த தலைப்பே வேணாம்!. ஹெச்.வினோத்துக்கு கட்டையை போட்ட கமல்.. சீக்கிரம் ஷூட்டிங் ஆரம்பிங்கப்பா!…

அதன் பிறகு அவர்களுக்கு ஒரு மகன் பிறக்க இருவரும் பிரிந்து விடலாம் என பிரிந்து வாழ்ந்து வந்தார்களாம். இப்போது பிரேமி ஒரு சில சீரியல்களில் நடித்து வருகிறார். மகேந்திரனை பொறுத்த வரைக்கும் சினிமாவில் ஒரு தன்னிகரற்ற இயக்குனராக வலம் வந்தவர்.

premi

ரஜினியும் மகேந்திரனும் நெருக்கமான நண்பர்களாம். அவர் வீட்டுக்கு அடிக்கடி ரஜினி வருவாராம். பிரேமி ரஜினிக்கு முட்டை தோசை மற்றும் நெத்திலி மீன் குழம்பு வைத்து கொடுப்பாராம். இப்படி ரஜினியும் மகேந்திரனும் நெருங்கி பழகியிருக்கிறார்களாம். ஏன் ஒரு நாள் மகேந்திரனையும் பிரேமியையும் தன் வீட்டிற்கு அழைத்த ரஜினி அவர்களிடம் லதாவை காட்டி இவரைத்தான் நான் திருமணம் செய்ய போகிறேன் என்றும் அறிமுகம் செய்துவைத்தாராம்.

இதையும் படிங்க: 3 மடங்கு அதிக சம்பளம்!.. தனுஷ் பட இயக்குனரை தட்டி தூக்கிய லெஜண்ட் சரவணா…

மகேந்திரனை பிரிந்த பிறகு ரஜினியை பார்க்க முடியவில்லை என்றும் அவர் இப்பொழுது மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார் என்றும் ஒரு வேளை ரஜினியை பார்த்தால் முதலில் என் மகனைக் காட்டி ‘இவன் யார் என்று தெரிகிறதா? உங்கள் நண்பரோட மகன் . யாரை மாறி இருக்கிறான்’ என்று கேட்பேன் என பிரேமி கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top