தக் லைப் போனா டோண்ட் கேர்!.. அடுத்தடுத்து பிஸியான கமல்!.. லிஸ்ட்டு பெருசா இருக்கே!...
Kamalhaasan: விஸ்வரூபம் 2- படத்திற்கு பின்னர் கமல் 4 வருடங்கள் சினிமாவில் நடிக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தப்போனார். அதேபோல், அரசியலுக்கு வருவதாகவும் அறிவித்து அதற்கான வேலைகளிலும் இறங்கினார். எனவே, சினிமாவில் அப்போது அவர் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அரசியல் அவருக்கு சரியாக அமையவில்லை.
எனவே, சினிமாவில் நடிப்பது என முடிவெடுத்து லோகேஷ் கனகராஜோடு இணைந்து விக்ரம் படத்தை கொடுத்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே தொடர்ந்து கல்கி எனும் பேன் இண்டியா படத்தில் நடித்தார். இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகிவிட்ட நிலையில் 2ம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது.
விக்ரம் ஹிட்டுக்கு பின் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் திரைப்படங்களை தயாரிப்பில் மும்முரம் காட்டியது. சிவகார்த்திகேயனை வைத்து அமரன் மற்றும் சிம்புவை வைத்து ஒரு படம் என அறிவிப்பு வெளியானது. இதில் அமரன் மட்டுமே டேக் ஆப் ஆனது. அதோடு, அப்படம் 300 கோடி வரை வசூல் செய்து கமலுக்கு லாபத்தை கொடுத்தது.
அதேநேரம், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தக் லைப் படத்தில் நடித்தார் சிம்பு. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நெகட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் காட்சி வெளியானவுடனேயே படம் நன்றாக இல்லை என பலரும் சொல்ல துவங்கிவிட்டனர். படம் வெளியாகி 2 நாட்களில் இப்படம் மொத்தமாக 50 கோடியை கூட வசூல் செய்யவில்லை.
கண்டிப்பாக இப்படம் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நஷ்டத்தை கொடுக்கும் என்றே கணிக்கப்படுகிறது. அதேநேரம், கமல் இதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் அடுத்தடுத்த வேலைகளில் இறங்கிவிட்டார். அடுத்து அன்பு - அறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் கமல் நடிக்கவிருக்கிறார். அதேபோல், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை வீர் தீர சூரன் பட இயக்குனர் அருண்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்கிற தகவல் விரைவில் வெளியாகும் என கணிக்கப்படுகிறது.