லோகேஷ் ரூட்டில் போகும் ஆதிக் ரவிச்சந்திரன்!... AK64 கதை என்ன தெரியுமா?!..
AK64: அஜித்துக்கு விடாமுயற்சி படம் சரியாக போகாத நிலையில் அடுத்து வந்த குட் பேட் அக்லி படம் அவரின் ரசிகர்களை திருப்திப்படுத்தியது. அதற்கு காரணம் அப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன். மகனுக்காக கேங்ஸ்டர் தொழிலை விட்டுவிட்டு மனம் திருந்தி சிறைக்கு போகிறார் அஜித். ஆனால், அதே மகனுக்கு பிரச்சனை வரவே மீண்டும் கேங்ஸ்டர் அவதாரம் எடுக்கிறார் என அதகளம் செய்திருந்தார் ஆதிக்.
எனவே, படம் முழுக்க மாஸ்டான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. எனவே, அஜித் ரசிகர்களுக்கு முழு கொண்டாட்டமாக இப்படம் மாறியது. அதேநேரம், படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு இப்படம் நஷ்டத்தை கொடுத்தது. எனவேதான், அஜித்தின் அடுத்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவில்லை.
அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். அஜித்துக்கு 180 கோடி சம்பளம் 120 கோடி செலவில் படம் என மொத்த பட்ஜெட் 300 கொடியை தொட்டதால் பல தயாரிப்பாளர் இப்படத்தை தயாரிக்க முன்வரவில்லை. ஒருவழியாக ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். விரைவில் பட வேலைகள் துவங்கவுள்ளது.
அஜித் இப்போது கார் ரேஸில் இருக்கிறார். வருகிற அக்டோபர் மாதம்தான் ரேஸை முடித்துவிட்டு சென்னை வருகிறார். அதன்பின்னரே அவர் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் இதை உறுதி செய்த ஆதிக் ‘அஜித் சாரின் அடுத்த படத்தை நான்தான் இயக்குகிறேன். இது குட் பேட் அக்லி படத்திலிருந்து வேறுபட்டிருக்கும்’ என சொன்னார். இது அஜித்தின் 64வது திரைப்படமாகும்.
இந்நிலையில், இந்த படத்தின் கதை தூத்துக்குடி துறைமுகத்தை பின்னணியாக கொண்டது என செய்தி வெளியே கசிந்திருக்கிறது. ஏற்கனவே ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கி வரும் கூலி படமும் துறைமுகத்தை பின்னணியாக கொண்ட படம்தான் .தங்க கடத்தலை மையமாக வைத்து இப்படத்தை லோகேஷ் உருவாக்கியிருக்கிறார். ஏகே64 படத்துக்கு ஆதிக் என்ன மாதிரியான கதையை உருவாக்கி வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை.