தென்காசி முருகன் கோயிலுக்கு மோகன்லால் கொடுத்த காணிக்கையை பார்த்தீங்களா!.. வெற்றிக்கு வித்திட்ட வேல்!

இன்று மோகன்லால் திருமலைக்குமார சுவாமி முருகன் கோவிலுக்கு செம்பு வேலை காணிக்கையாக வழங்கியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.;

By :  SARANYA
Published On 2025-05-29 21:37 IST   |   Updated On 2025-05-29 21:37:00 IST

மலையாள நடிகர் மோகன்லால் AVS ஸ்டுடியோஸ் மற்றும் ஃபர்ஸ்ட் காப்பி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் நந்தா கிஷோர் இயக்கத்தில் உருவாகி வரும் விருஷபா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஆக்‌ஷனுடன் கூடிய ஒரு காவிய கதையாக உருவாகவுள்ளது. இந்நிலையில் இன்று மோகன்லால் திருமலைக்குமார சுவாமி முருகன் கோவிலுக்கு செம்பு வேலை காணிக்கையாக வழங்கியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் மோகன்லால் தனது 65வது பிறந்த நாளை முன்னிட்டு தான் நடித்து முடித்துள்ள ஹிருதயபூர்வம் படத்தின் போஸ்டரையும், அடுத்து நடிக்கவிருக்கும் விருஷபா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருந்தார். மேலும், மோகன்லாலின் தொடரும் படம் வருகின்ற மே 30ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.


மலையாள திரையுலகில் மம்மூட்டியை விட பாக்ஸ் ஆபீஸ் மாஸ் காட்டி வருவது மோகன்லால் தான். இந்த ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிஃபர் 2 எம்புரான் திரைப்படம் 250 கோடி ரூபாய் வசூல் ஈட்டி லைகா நிறுவனத்தை சற்றே நிம்மதி பெருமூச்சு விட வைத்தது.

அதனை தொடர்ந்து ஷோபனாவுடன் இணைந்து அவர் நடித்த தொடரும் படமும் 200 கோடி வசூலை தியேட்டர் ரிலீஸ் மூலம் அள்ளியது. நாளை அந்த படம் ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில், தமிழ் சினிமா ரசிகர்களும் ஓடிடியில் அந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கேரளாவில் ஏகப்பட்ட கோயில்கள் இருந்தாலும், தொடரும் படத்தின் வெற்றிக்காக தென்காசி அருகே உள்ள செங்கோட்டை, பைம்பொழில் திருமலைக்குமார முருகன் சுவாமி முருகன் கோயிலுக்கு செம்பு வேல் ஒன்றை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

அடுத்ததாக தமிழில் ரஜினிகாந்த் உடன் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்திலும் மோகன்லால் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

Tags:    

Similar News