தமிழ் மீதான பற்று கிடையாது.. கமல் பிடிவாதத்துக்கு உண்மையான காரணம் இதுதானா?
kamal
கமல்ஹாசனுக்கு திடீர் பிடிவாதம் எப்படி? கன்னடமா? தமிழா? என்ற கேள்வி வரும் பொழுது எனக்கு அந்த 12 கோடி போனாலும் பரவாயில்லை. நான் தமிழுக்காக நிற்கிறேன் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்னார். இதைப்பற்றி வலைப்பேச்சு பிஸ்மி கூறும் பொழுது இது தமிழுக்காக நிற்பதாக எடுத்துக்க முடியாது. கமலை கூர்ந்து கவனிக்கும் போது தெரியும்.
தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பிரச்சினையை பற்றி பேசும்பொழுது ஒரு தமிழனாக தன்னை அடையாளப்படுத்திப்பார். இன்னொரு பக்கம் தன்னை ஒரு இந்தியனாகவும் காட்டிக் கொள்வார். அதனால் எப்பொழுதுமே தமிழ் தேசியம் கொள்கை மீது நம்பிக்கை கொண்டவர்கள் தன்னை ஒரு இந்தியனாக அடையாளப்படுத்திக்க மாட்டார்கள். கமலை பொருத்தவரைக்கும் அந்த இடத்திற்கு ஏற்றவாறு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்.
உதாரணமாக கேரளாவில் ஏதாவது ஒரு விழாவுக்கு போனால் நான் ஒரு பாதி மலையாளி என்பார். கர்நாடகாவுக்கு போனால் நான் கண்டனாக இருக்க பெருமைப்படுகிறேன் என்று கூறுவார். அந்த மக்களோடு கனெக்ட் ஆவதற்கான உத்தி தான் அது. நானும் உங்களை மாதிரி தான் என்பதைப் போல அவருடைய நிலைப்பாடு இருக்கும். இவர் போகும் இடம் எல்லாம் பேசுவதை வைத்து நான் புரிந்து கொண்டது என்னவெனில் கமலுக்கு தமிழ் பற்று இருந்தாலும் சீமான் போன்றவர்களுக்கு இருப்பதைப் போல ஒரு பற்று கமலுக்கு கிடையாது.
கமல் அவருடைய கருத்துக்களுக்கு பின்வாங்க மாட்டேன். மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறுவது தமிழ் மீதான பற்று கிடையாது. தன்னுடைய ஈகோவை அது பாதிக்கிறது என்பது மாதிரியாக அவர் நினைக்கிறார். இதைப்பற்றி கமல் தரப்பில் விசாரிக்கும் பொழுது இன்று இதற்காக மன்னிப்பு கேட்டோம் என்றால் எதிர்காலத்தில் எல்லாத்துக்கும் யார் வேண்டுமானாலும் மன்னிப்பு கேளுங்கள் என்பது மாதிரி ஒரு விஷயத்தை தூக்கி கொண்டு வருவார்கள்.
அதனால் இந்த விஷயத்தில் அவர் பிடிவாதமாக இருக்கிறார் என கூறினார்கள். இன்னொரு காரணம் அவர் ராஜ்ய சபா எம்பியாக போகும் நிலையில் மன்னிப்பு கேட்பது என்பது பொலிட்டிக்கல் ரீதியாக அவருக்கு ஒரு பின்னடைவை கொடுக்கும் என்று நான் நினைக்கிறேன். அதனால் இதுதான் காரணமாக இருக்கலாம் என பிஸ்மி கூறி இருக்கிறார்.