யாரு யாருக்கு ஜோடி? கலாச்சார புரட்சியால இருக்கு.. தக் லைஃபில் ஏற்றுக்கொள்ள முடியாத காட்சி
thuglife
Thuglife Review: தக் லைஃப் மணிரத்னம் படம் என்பதால் ரத்தக்களரி அதிகமாக இல்லை என கூறும் பட்சத்தில் இருந்தாலும் மணிரத்தினம் படத்தில் இப்படி ஒரு வன்முறையா என்ற சொல்லும் அளவிற்கு படத்தில் சில காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கிறது .கதையை நம்பி படம் எடுக்கலாம் என்பது மணிரத்தினத்தை பொறுத்த வரைக்கும் சரியாக இருக்கும் .ஆனால் இந்த படத்தை பார்த்த பிறகு கமலை நம்பி படம் எடுக்கலாம் என்ற அளவுக்கு இருக்கிறது .
அதனால் தான் ஓப்பனிங்கில் கமலின் இள வயது கமலிலிருந்து ஆரம்பிக்கிறார்கள் .அவ்வளவு அற்புதமாக இருக்கிறது விஎஃப்எக்ஸ். ஒரு காட்சியில் திடீரென குருதிப்புனல் கமல் மாதிரியே இருக்கிறது. அதேபோல் நாயகன் படத்தில் இள வயது தோற்றத்தில் இருக்கும் கமலையும் இந்த படத்தில் பார்க்க முடிகிறது. பல எமோஷனல் காட்சிகள் இந்த படத்தில் இருக்கிறது.
குளோஸப்பில் அதை காட்டும் பொழுது நம்மை அறியாமலேயே அழுகை வந்து விடுகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் கமலின் கழுத்தை நெரிக்கும் காட்சி வரும் .அதைப் பற்றி மேடையில் பேசும்போது உண்மையாகவே கழுத்தை நெறுத்து விட்டோமோ என்ற பயம் வந்துவிட்டது என சிம்பு கூறினார். அது கேட்பதற்கு மேடைப்பேச்சுக்காக சொல்கிறார் என தோன்றியது.
ஆனால் படத்தை பார்க்கும் பொழுது அவர் சொன்னது உண்மைதான். அந்த அளவுக்கு தத்ரூபமாக இருந்தது. அதனால் கமலை வியந்தது ஒரு பக்கம் இருந்தாலும் அடுத்தடுத்து பல கேரக்டர்கள் இந்த படத்தில் இருக்கிறார்கள். இந்த படத்தில் இருக்கும் பெரிய சவால் என்னவெனில் இவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட்டை சரியாக பயன்படுத்துவது தான். படத்தின் கிளைமாக்ஸில் கூட கமலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதே அளவு முக்கியத்துவத்தை தான் சிம்புவுக்கு கொடுத்திருக்கிறார்கள் .
படத்தில் முகம் தெரிகிற காட்சியில் சிம்பு குறைவாக இருந்தாலும் அவருடைய கேரக்டர் பெயரை ஒவ்வொருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது படம் முழுக்க டிராவல் செய்கிறார் சிம்பு. இதில் பெரிய அதிர்ச்சி என்னவெனில் மேடம் ஐ அம் ஒன்லி யுவர் ஆடம் என சிம்பு போய் அந்த இடத்தில் உட்கார்ந்து விடுகிறார். இந்த கலாச்சார அதிர்ச்சியில் இருந்து விடுபட முடியவில்லை.
thuglife
ஏனெனில் கமலின் ஜோடி என த்ரிஷா வருகிறார். கமலின் வளர்ப்பு மகனாக சிம்பு வருகிறார் .ஒரு கட்டத்தில் கதையில் கமல் இல்லை. அடுத்து நான் தான் ரங்கராய சக்திவேல் என சிம்பு வந்துவிட்டார். வந்ததும் திரிஷாவை தேடியா போவார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. அதன் பிறகு எப்படி போகுது என்பதுதான் படம் .கலாச்சார அதிர்ச்சியாக இது இருந்தாலும் மணிரத்தினத்தை பொறுத்தவரைக்கும் இது கலாச்சார புரட்சி என வலைப்பேச்சில் படத்தைப் பற்றி விமர்சித்திருந்தனர்.