Connect with us

Cinema News

சிறகடிக்க ஆசை: ஸ்ருதி- ரவி காதலுக்கு நோ சொன்ன முத்து… தங்கையை பெண் கேட்டு மீனாவுக்கு கொடுத்த அதிர்ச்சி..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி, ரவியின் காதலை குறித்து மீனா முத்துவிடம் கூறுகிறார். இதனால் முத்து ரொம்பவே கோபப்படுகிறார். உடனே ரூம் கதவை சாத்தும் மீனா கொஞ்சம் பொறுமையா தான் பேசுங்களேன். ஹாலில் தான் மாமா உட்கார்ந்து இருக்கார். கேட்ட வருத்தப்பட போறாரு எனக் கூறுகிறார்.

எதுக்கு அமைதியா பேசணும்? நான் அவன்கிட்ட அப்பாக்கு மரியாதை கொடுக்காத குடும்பத்துல இருந்து பொண்ணை பார்க்க கூடாதுனு சொன்னேன்ல. அவன் கேட்காம இப்டி பண்ணிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் எனக் கத்துகிறார். ஸ்ருதி ரொம்ப நல்ல பொண்ணுங்க எனக் கூறுகிறார். இருந்துட்டு போகட்டும். 

இதையும் படிங்க:  படிப்பு வரலன்னா சாகணுமா?!.. மகளுக்காக மல்லுக்கட்டும் வத்திக்குச்சி வனிதா!….

அந்த குடும்பம் நமக்கு செட்டாகவே ஆகாது. இதை இப்டியே விட முடியாது. வா என்கூட என மீனாவை அழைத்து கொண்டு ரவி வேலை செய்யும் ரெஸ்டாரெண்ட்டுக்கு அழைத்து செல்கிறார். அங்கே போயும் ரவி மீது ஏகத்துக்கும் கோபமாக கத்துகிறார். மீனா அமைதிப்படுத்துகிறார்.

ரவி முத்துவை தனியாக அழைத்து சென்று ஏன் கோபத்துல இருக்க எனக் கேட்கிறார். அந்த பொண்ணோட பழகாதனு சொன்னேன்ல. இன்னும் திருந்தலையா நீ என கத்துகிறார். எந்த பொண்ணு என ரவி கேட்க, அப்படி எத்தனை பொண்ணோட நீ பேசுற அந்த வாசுதேவன் பொண்ணுடா என முத்து கோபப்படுகிறார்.

ஸ்ருதியா அவ நல்ல பொண்ணு தான் என ரவி கூற, இருக்கட்டும். ஆனா அந்த குடும்பம் நமக்கு செட்டாகாது. அவர் அப்பாக்கு செஞ்சதெல்லாம் மறந்து போச்சா என சத்தம் போடுகிறார். இனிமே நீ அந்த பொண்ணோட பேசுறத நிறுத்துக்க. எந்த ஆசை இருந்தாலும் மறந்துடு எனச் சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

இரவு தூங்கிக்கொண்டு இருந்த மீனாவை எழுப்பிய முத்து, ரவி அந்த பொண்ணோட பேசுறத நிறுத்திடுவான்ல. நீ சொன்னியா அவனிடம் எனக் கேட்கிறார். நீங்க தான் கத்திட்டு வந்தீங்களே? நான் என்ன சொல்றது? வயசுக்கோளாறு பேசத்தோணும். இதுக்கு ஒரு முடிவு கட்டணும்.

இதையும் படிங்க: அய்யோ முடியலடா சாமி!.. அயலான் ரிசல்ட்.. இப்பவே கண்ணுக்குத் தெரியுதே!.. பொங்கலோ பொங்கல் தான்!..

நாளைக்கு ரெடியா இரு எனச் சொல்லிவிட்டு தூங்குகிறார். பின்னர் காலையில் கிளம்பி மீனாவை அழைத்துக் கொண்டு செல்கிறார். ஒரு இடத்துக்கு போறோம் என்பது மட்டுமே சொல்லிவிட்டு பழங்கள் வாங்கி மீனா வீட்டுக்கு போகிறார். மீனா அம்மாவை அழைத்து ஒரு தட்டில் தாம்பூல பழத்தினை வைத்து அவர் தங்கையை பெண் கேட்கிறார். இதனால் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

பின்னர் மீனா அம்மா, விஜயாவை நினைத்து பயப்படுகிறார். என் பெண் வாழ்க்கையே நரகமா மாறிடும். பயந்து வாழணும் எனக் கூறி அந்த சம்மந்தத்தினை மறுக்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது. 

google news
Continue Reading

More in Cinema News

To Top