Connect with us

Cinema News

ஒரு குருவை அசிங்கமா பேசுன போது ரசிச்ச சிஷ்யன் கார்த்தியா தான் இருக்கும்… கார்த்தி என்ன சிவாஜியா? நடிகர் அதிரடி..!

Karthi sivakumar: தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அமீர் குறித்து தரக்குறைவாக பேசிய பேட்டியால் கோலிவுட்டின் இயக்குனர்கள் அனைவரும் கொதித்தெழுந்து இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் ஒருவரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து கார்த்தியை சீண்டிவிட்டு இருக்கிறார்.

ஞானவேல் ராஜா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் அமீரை திருடன் என்ற லெவலில் பேசினார். மேலும் பன்றிக்கெல்லாம் கணக்கு சொன்னார். பருத்தி வீரன் படத்தினை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தான் இயக்கி கொடுத்தார். அமீருக்கு சூர்யா தான் வாழ்க்கை கொடுத்தார் என மோசமாக விமர்சித்தார். இந்த பேட்டி வைரலானதை அடுத்து பல முன்னணி இயக்குனர்கள் அமீருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மெட்டி ஒலி தனமா இவங்க.. என்னங்க இப்படி ஆகிட்டீங்க..! 10 வருஷம் கழிச்சு வெளிவந்த உண்மை..!

ஞானவேல்ராஜாவின் பேச்சுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தும் இருந்தனர். இந்நிலையில் பருத்தி வீரன் படத்தில் கோ டைரக்டராக பணியாற்றிய ராஜா பேட்டி கொடுத்து இருக்கிறார். அவர் பேட்டியில் இருந்து, அந்த படத்தில் பூஜை போட்டதில் இருந்து எனக்கு என்ன நடந்தது என்று தெரியும். நான் எல்லாத்தையும் நேரில் பார்த்தேன். இப்போ பொதுவெளியில் ஞானவேல் பேசியது எதுக்கு? கார்த்தி25 நிகழ்ச்சி நடந்தது.

அதில் முதல் பட இயக்குனரே இல்லை. ஆயிரம் பிரச்னை இருக்கட்டும். குருநாதரை கூப்பிட வேண்டும் தானே. கார்த்தி நல்ல நடிகர் என்று பருத்திவீரன் தான் அடையாளமே. சிவகுமார் குடும்பம் இப்படி நிகழ்ச்சி நடத்த இருந்த போதே சமாதானம் செய்து இருக்க வேண்டும். அப்படி நடந்து இருந்தால் அமீர் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியாக கலந்து கொள்வார்.

இதையும் படிங்க: வில்லனை வீட்டுக்குள்ள களமிறக்குறீங்க போல… ஸ்ருதி காமெடி பீஸ் ஆகாம இருந்தா சரி… விஜயா ஆட்டம் ஆரம்பமாகுமா?

சூர்யா குடும்பம் தான் இந்த பேட்டியை ஞானவேல்ராஜாவை கொடுக்க வைக்க சொல்லி இருக்கும் என நான் சொல்வேன். கோர்ட்டில் கேஸ் இருக்கும் போது அமீரை எப்படி திருடன் எனச் சொல்லலாம். அப்போ கோர்ட்டை அவமானம் படுத்துகிறீர்களா? கார்த்தி அமீரை பருத்திவீரன் படம் முடிந்து வந்து ஏன் பார்க்கவில்லை. குருநாதரை அசிங்கப்படுத்துவதை பார்த்து ரசித்த முதல் சிஷ்யன் கார்த்தியாக தான் இருக்கும். இவரும் கஷ்டத்தினை பார்த்தவர் தானே ஏன் பொதுவெளியில் பேசக்கூடாது?

கார்த்தியை ஒருமுறை கூட அமீர் அசிங்கப்படுத்தி இருந்தது கிடையாது. அப்படி நடந்து இருந்தால் கார்த்தி சொல்லட்டுமே. பொதுவெளியில் நடப்பதை ஏன் பார்த்து கொண்டு இருக்கிறீர்கள். படைப்பாளியை கோர்ட்டுக்கு ஏற வைத்தீர்களே அதுவே உங்க குடும்பத்துக்கு அசிங்கம்.

இதையும் படிங்க: ரசிகர்கள் இத செஞ்சா நான் ஜெயிச்ச மாதிரி! அஜித் சொன்ன சீக்ரெட்டை பகிர்ந்த இயக்குனர்

இந்த பேட்டியைக் காண: https://www.youtube.com/watch?v=FE2oK-2WKVg

google news
Continue Reading

More in Cinema News

To Top