ரஜினி, எம்ஜிஆர் ஸ்டில் அந்த ஒண்ணுதான் இருக்கு... வேற எதுவுமே இல்லையே... என்னாச்சு?
எம்ஜிஆருடன் ரஜினி இருக்குற மாதிரி ஸ்டில் இருக்கவே இருக்காது. 1983ல் எம்ஜிஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்குறாங்க. தமிழ்த்திரை உலகமே சேர்ந்து அவருக்கு நேரு ஸ்டேடியத்துல பாராட்டு விழா நடத்துறாங்க. தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இருந்து ஒரு ஊர்வலமா நடிகர்கள் அனைவரும் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் போனாங்க. அண்ணா சாலை வழியா போய் நேரு ஸ்டேடியத்துல இறங்கி எம்ஜிஆருக்குப் பாராட்டு விழா நடத்துனாங்க.
ஒரு பக்கம் பாரதிராஜாவும், பாக்கியராஜூம் நிற்பாங்க. இன்னொரு பக்கம், கமலும், ரஜினியும் நிற்பாங்க. எம்ஜிஆருக்குப் பொன்னாடை, மாலை போடுவாங்க. ரஜினிகாந்த் ஓரமா நின்னுக்கிட்டு இருப்பாரு. அந்த ஒண்ணுதான் ரஜினி எம்ஜிஆரு கூட நிற்பாரு.
ரஜினி லதாவைக் காதலித்ததும் ஒரு காரணம்னு சொல்றாங்க. ரஜினியோட வளர்ச்சி எம்ஜிஆருக்குப் பிடிக்கலன்னும் ஊடகங்கள் எழுதுனாங்க. அதே மாதிரி ஜெயலலிதா முதல்வர் ஆன நேரம். அண்ணாமலை படத்திலும் ஜெயலலிதாவை எதிர்த்துப் பேசினதா ஒரு காட்சி இருக்கு.
கிளி ஜோசியத்துல ஒரு பொம்பளையால உனக்குப் பிரச்சனை வரும்னு சொல்வாரு. அப்போ அங்கே குஷ்பு வருவாரு. வினுச்சக்கரவர்த்தி மினிஸ்டர். அவர் வீட்டுல நாத்தை எல்லாம் ரஜினி நட்டுவாரு. 'நான் பாட்டுக்கு சிவனேன்னு என் வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். என்னைத் தேவையில்லாம சீண்டாதீங்க. சீண்டுனா தேவையில்லாத விளைவை எல்லாம் சந்திப்பீங்க'ன்னு ரஜினி சொல்வார். மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
ஆனால் ரஜினியின் ஆருயிர் நண்பரான கமல் குழந்தை நட்சத்திரமாக எம்ஜிஆரின் ஆனந்த ஜோதி படத்தில் நடித்துள்ளார். திரையுலகில் அனைவரும் எம்ஜிஆரை வாத்தியார் என்றே அன்புடன் அழைப்பர். அந்த வகையில் கமல், பாக்கியராஜ், ரஜினி என பலரும் அப்படித்தான் அழைப்பார்கள். ஆனால் ரஜினி இந்த விஷயத்தில் எம்ஜிஆருடன் நெருங்கிப் பழகாதது ஆச்சரியமாக இருக்கிறது.